தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உதவித்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (அக்.7) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திராவிடா் மற்றும் பழங்குடியினா் 40 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பித்தவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முறையாக 9ம் வகுப்பு முடித்து 10 ம் வகுப்பில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு மாதம் 200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலை கல்வியை முடித்தவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்!
தினசரி கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.