விடுமுறையை ரத்து செய்த கல்வித்துறை – அதிர்ச்சியில் மாணவர்கள்!

0
விடுமுறையை ரத்து செய்த கல்வித்துறை - அதிர்ச்சியில் மாணவர்கள்!
முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை  முன்னிட்டு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறையானது தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைகள் ரத்து:

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதியான இன்று முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளது. முன்னதாக பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நாட்கள் அனைத்தும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கல்வித் துறை அதிகாரிகள் இந்த முடிவை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் காரணமாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறைகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் மதியம் ஒரு மணி முதல் 5 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நடப்பாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை கோடைகால விடுமுறை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!