தமிழகத்தில் PSTM சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
PSTM சான்றிதழ்:
தமிழகத்தில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியினை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (பிஎஸ்டிஎம் சான்றிதழ்) வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதாவது, இ-சேவை மையங்கள் மூலமாக இதுவரைக்கும் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கே அனுப்பப்படவுள்ளன. இவ்வாறு பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்புகின்றனர். இதனையடுத்து, இந்த விண்ணப்பங்களை பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும், பள்ளித் தலைமையாசிரியர் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய & மாநில அரசுகளின் மானியம் & சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் – UIDAI அதிரடி அறிவிப்பு!
மேலும், தகுதியானவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தையும் தலைமையாசிரியா்கள் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர்கள் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணியினை சிறப்பாக செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்