மத்திய & மாநில அரசுகளின் மானியம் & சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் – UIDAI அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் இல்லாத நபர்கள் அரசின் ஏதேனும் அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது UIDAI அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆதார் எண் கட்டாயம்
இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள ஆவணங்களில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் கணக்கு சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய பயன்படுத்தப்படும் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் இதற்கு பல முறை கால அவகாசம் கொடுத்த பிறகும் இணைக்காமல் உள்ளனர்.
இதனால் தற்போது அபராதம் செலுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் பலன்கள், சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டைக்கு தற்போது தான் விண்ணப்பித்திருந்தால் அவர்கள் அரசின் வேறு சில அடையாள அட்டையை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஆதார் இல்லாதவர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற விரும்பினால் ஆதார் சட்டத்தின் 7வது பிரிவின்படி அரசின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.
SBI வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஆனால் தற்போது அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற ஆதார் விதிகளை கடுமையாக்கி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற நினைப்பவர்கள் கட்டாயமாக தங்களின் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்