தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள்:

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா கொரோனா என்னும் கொடிய நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நோயானது காற்றின் மூலம் பரவும் தன்மை உடையதால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அத்தகைய சமயத்தில் உலக சுகாதார நிறுவனம் இந்நிலையை உலக அவசர காலமாக அறிவித்திருந்தது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வேலை நிறுவனங்கள் உள்பட அனைத்து வேலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பொது முடக்கம், ஊரடங்கு போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக மக்கள் வேலைகளை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. இந்தியாவில் ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் அதிகமாகி விட்டதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகி வருகிறது.

புதிதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பு – புதுவை முதலவர் உறுதி!

மேலும் தனியார் பள்ளிகள் அதிகமான கட்டணங்கள் வசூலிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் ஆக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 72 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!