தமிழகத்தில் ஜூலை 19 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை – ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைவாக இருந்தாலும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைய தொடங்கியது. நிலைமையை சரி செய்ய மே 10 வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதன் பின்னர் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைசியாக அறிவித்த ஊரடங்கு ஜூலை 12 வரை முடிவடைய உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் ஜூலை 19 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – அதிகாரிகள் விளக்கம்!
கடந்த முறை அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்படாதவை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரி தவிர அனைத்து மாநிலங்களுக்கும் போக்குவரத்து சேவைக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பார்களும், நீச்சல் குளங்களும் திறக்க தடை தொடரும் எனவும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் நடத்த தடை தொடரும் எனவும், பள்ளி, கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்ட தடை ஜூலை 19 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.