தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்றோர் களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வேலை இழப்பு அதிகரித்தது. ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அரசு பணிகளில் சேர்வதற்கு போட்டித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டது. தற்போது அரசு பணியாளர் தேர்வாணயத்தின் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணல் மூலம் அரசு பணிகள் வழங்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை அக்.26ம் தேதிக்குள் விடைபெறும் – இந்திய வானிலை மையம் தகவல்!
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தாக்கம் இருப்பதால் அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளை நடத்தவில்லை. இந்த நேரத்தில் அரசு வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? மாதம் & ஆண்டு ஊதிய விவரம் கணக்கீடு!
மாற்று திறனாளர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதுமானது. உதவித்தொகை பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு அட்டையை காண்பித்து விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவம்பர் 30 ம் தேதிக்குள் உரிய கல்வி தகுதி சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கல்வித்தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.