தென்மேற்கு பருவமழை அக்.26ம் தேதிக்குள் விடைபெறும் – இந்திய வானிலை மையம் தகவல்!
நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவ மலை முடிவுக்கு வருகிறது. அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை:
தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பரவலாக பெய்யும். இந்த தென்மேற்கு பருவமழை சீராக பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறையின் பொது இயக்குநர் மிருதுஜெய் மகாபத்ரா கூறுகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் வடமேற்கு மாநிலங்களில் சராசரியாக இருக்கும். லே, லடாக் பகுதிகளில் பருவமழை சராசரியை விடவும் சற்று குறைவாக இருக்கும். அதேசமயம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சராசரியை விடவும் சற்று கூடுதலாக இருக்கும் எனக் கூறியிருந்தார். அந்த வகையில் இந்த வருடம் இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. வெவ்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் அதிக கனமழை, பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் சில பகுதிகளில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? மாதம் & ஆண்டு ஊதிய விவரம் கணக்கீடு!
அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளது. அணைகள் உடைக்கும் அபாயம் இருப்பதால் அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. தற்போது விவசாயங்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மழையை கொடுத்துள்ளது. தற்போது விடைபெறும் தருவாயில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட நான்கரை மாதங்களுக்கு பிறகு கடந்த 6 ம் தேதி முதல் பருவ மலை விடைபெறத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோஹிமா, சில்சார், கிருஷ்ணாநகர், பாரிபாடா, மல்காங்கிரி, நல்கொண்டா, பாகல்கோட், வென்குர்லா ஆகிய இடங்களில் இருந்து பருவமழை விடைபெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து வங்கக்கடலில் வடகிழக்கு காற்று உருவாவதற்கான சூழல் நிலவுவதால் தென்மேற்கு பருவமழை வரும் 26 ம் தேதிக்குள் முடிவுக்கு வரும்.
வீட்டுக் கடனுக்கு 12 மாத தவணை தள்ளுபடி – Axis வங்கி அதிரடி சலுகை!
அதை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தென்கிழக்கு பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பலன் பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகைய மழையினால் சில இடங்களில் விவசாயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில இடங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.