கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு ‘இது’ கட்டாயம் – ஆட்சியர் உத்தரவு!
தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளை அரசு நியமித்துள்ள நிலையில், இது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கல்விஉதவித்தொகை:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆனது மாணவர்களின் நலனிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதனால், கல்வியை தொடர முடியாத நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதேபோல், காலை உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து காலை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறி பணி நீக்கங்கள் செய்த ட்விட்டர் – வெளியான தகவல்!
இதேபோல், தமிழக அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சமீபத்தில் அரசு, மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதன்படி, தற்போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிதாக கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு மாணவர்கள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்களை கொடுத்து அஞ்சல் வங்கி கணக்கை தொடங்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download