SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பான், ஆதார் கார்டு இணைப்பு!
உங்கள் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். இல்லையேல் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலக்கெடு முடிவு :
பாரத ஸ்டேட் வங்கியானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் பான் கார்டை இணைப்பது அவசியமாகிறது. அப்படி , இணைக்காதவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும், இதற்கான கால கெடு என்பது செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் இந்த செயலை துரிதப்படுத்துமாறு, வங்கி பயனர்களிடம் அறிவுறுத்தி உள்ளது.
கரும்பிற்கான ஆதரவு விலை ரூ.290 ஆக அதிகரிப்பு – ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் விளக்கம்!
மேலும், இதற்கான காலக்கெடு இதற்கு முன்பே நீட்டிக்கப்பட்டுள்ளதால், இனியும் நீடிக்கப்பட வாய்ப்பில்லை என கூறியுள்ளது. இந்த இணைப்பினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காமல் தவற விடும் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனை தடுப்பு நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது எனவும் அறிவித்துள்ளனர். இந்த இணைப்பில் வாடிக்கையாளருக்கு தனிப்பட்ட முறையில் எந்த வகையிலும் தொல்லை இருக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது மட்டுமில்லாமல், இந்த பான் கார்டு இணைப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு நபர் 50,000 ரூபாய் வரை மட்டுமே தனது கணக்கில் பணம் போட முடியும் என்றும், வருமான வரி ஏய்ப்பு செய்பவர்கள் இதன் மூலம் கண்டறிய படுவார்கள் என்பதையும் உறுதியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் சட்டமான சட்ட பிரிவு 139 AA இன் பிரிவு 41 யும் மேற்கோள் காட்டியுள்ளது. இதனால், இதுவரை வங்கி கணக்குடன் தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்காதவர்கள் விரைந்து இதனை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.