SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பாதுகாப்பான பண பரிவர்த்தனை.. OTP நடைமுறை மாற்றம்!
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பண பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது OTP முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
SBI:
இந்தியாவில் தற்போது முக்கால்வாசி பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் வேலை பளு குறைகிறது. அதே போல் நேரமும் மிச்சமாகிறது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய நிலையில் இருந்தாலும் மறுபுறம் இதில் ஆபத்தும் உள்ளது. அதாவது சமீப காலமாக சைபர் கிரைம் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தடுப்பதற்காக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் SBI வங்கி அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. மேலும் பண பரிவர்த்தனைகளில் முழு பாதுகாப்பை அளிக்கும் பொருட்டு புதிய மாற்றங்களையும் செய்து வருகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – திருச்சி மாவட்ட ஆட்சியர் விடுத்த முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது இ – மெயில் முகவரிக்கு OTP அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாம் பணத்தை எடுக்கும் போதும் வங்கி சார்ந்த பிற வேலைகளின் போதும் வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். இந்த நிலையில் இனி வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள இ – மெயில் முகவரிக்கும் OTP அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் SBI இன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று நெட்பேங்கிங் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் இ -மெயில் என்பதனை கிளிக் செய்து தங்கள் இ -மெயில் முகவரியை பதிவு செய்யவேண்டும்.