வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் எஸ்பிஐ கிளார்க் பணிக்கான தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளிப்போகும் தேர்வு முடிவுகள்:
SBI ஆனது அவ்வப்போது தேர்வுகள் நடத்தி அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த வகையில் எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 80,000 பேர் முதற்கட்ட தேர்வில் கலந்து கொண்டனர், அதன் பின் பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் இதற்கான மெயின்ஸ் தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் குறித்து தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து கொண்டு இருக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்… பேரிடர் துறை முக்கிய அறிவுரை!
இந்நிலையில் மக்களவை தேர்தலானது வரும் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே தேர்தல் முடியும் வரை முடிவுகள் வெளியிடுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. தேர்தல் முடிந்த பின் SBI வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் எஸ்பிஐ கிளார்க் பணிக்கான முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.