SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வங்கியில் ‘ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ்’ பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
SBI வங்கி:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அடிக்கடி தனது வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது எஸ்பிஐ வங்கி ‘ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ்’ பணிக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 48 காலியிடங்களை நிரப்ப வங்கி திட்டமிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SBI-sbi.co.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 25, 2022 ஆகும். உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்) பணிக்கு 15 காலியிடங்களும், உதவி மேலாளர் (ரூட்டிங் & மாறுதல்) பணிக்கு 33 காலியிடங்களும் உள்ளது. அதிகபட்சமாக இந்த பணிக்கு விண்ணப்பதாரர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதற்காக எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers மூலம் ஆன்லைனில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!
ஆன்லைன் தேர்வு மார்ச் 20 ம் தேதி அன்று நடத்தப்படும். பணி தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் இணையதளங்களை (https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் பின்னர் மின்னஞ்சல் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் அல்லது வங்கியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவார்கள்.