IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!

தற்போது 2022 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்கான முதல் ஆட்டத்தை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி துவங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

IPL போட்டிகள்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்த 15வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் துவங்க இருக்கிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் களம் காண இருக்கிறது. இந்த IPL போட்டிகளுக்கான அணி வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் கடந்த வாரத்தில் நடைபெற்றிருந்தது.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறுகிறது!

அந்த வகையில் 2022 IPL ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 21 வீரர்களை வாங்கியது. குறிப்பாக CSK அணியின் விலை உயர்ந்த தேர்வில் தீபக் சாஹர் (ரூ. 14 கோடி), டுவைன் பிராவோ (ரூ.4.4 கோடி), அம்பதி ராயுடு (6.75 கோடி), மற்றும் சிவம் துபே (ரூ. 4 கோடி) ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இதற்கு முன்னதாக ஏற்கனவே CSK அணியில் ரவீந்திர ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய முக்கியமான 4 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் IPL 2022க்கான CSK அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

இதற்கிடையில் IPL போட்டியின் நடப்பு சம்பியனான CSK அணி 25 அற்புதமான வீரர்களுடன் 2022 போட்டிக்கு தயாராகி வருகிறது. இப்போது 15வது IPL சீசனுக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த XI உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் படி ருதுராஜ் கெய்க்வாட் அணியின் தொடக்க வீரராக இருக்கலாம் என்று தெரிகிறது. வலது கை பேட்ஸ்மேன் ஆன ருதுராஜ் கடந்த சீசனில் அற்புதமாக விளையாடி, 16 ஆட்டங்களில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். இவரை தொடர்ந்து அம்பதி ராயுடு, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, டுவைன் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோர் முதல் போட்டியில் களம் காணலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!