SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் & பான் இணைப்பு இறுதி நாள்!
பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு அவசியம் என்றும், அதற்கான இறுதி நாளையும் அறிவித்துள்ளது.
ஆதார் -பான் இணைப்பு:
மத்திய அரசு அனைத்து ஆவணங்களையும் ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில வருடங்களாக படிப்படியாக நடந்து வருகிறது. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய பான் எண்ணும், எல்பிஜி மானியம், உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசாங்க திட்டங்களிலிருந்து பண பலன்களைப் பெற ஆதார் எண்ணும் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்காக அரசு முன்னதாக பல முறை அவகாசம் வழங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தொடர்ந்து கொரோனா கால ஊரடங்கு தொடர்வதால் இதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் மற்றும் பான் இரண்டையும் இணைக்க வலியுறுத்தியுள்ளது. மேலும், மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் முழுமையான வங்கி சேவையை பெற முடியாது என்றும் எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!
ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கும் முறை:
567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும், இணையதள சேவையின் மூலமும், அல்லது பான் சேவை மையத்தில் ஒரு குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி வழங்குவதன் மூலமும் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க முடியும்.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் முறை :
- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான www.incometaxindiaefiling.gov.in க்கு செல்ல வேண்டும்.
- வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது ஒரு புதிய பக்கத்தில் “நீங்கள் ஏற்கனவே இணைப்பு ஆதார் கோரிக்கையை சமர்ப்பித்திருந்தால் நிலையைக் காண இங்கே கிளிக் செய்க” என்று காண்பிக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்கள் ஆதார்-பான் நிலை இணையதளத்தில் காண்பிக்கப்படும்.
- இதுவரை இணைக்காத நிலையில், பான்-ஆதார் அட்டையை இணைக்க அதே பக்கத்தில் கிடைக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும்.