Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!
இந்தியாவில் போஸ்ட் ஆபீஸில் முதலில் ஆரம்பித்த செல்வமகள் காப்பீடு திட்டம், பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். மேலும் இந்த திட்டம் தற்போது முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்துக்கு பெண் குழந்தைகளின் பெற்றோரின் ஆதரவும் பெருகி வருகிறது இந்த நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எப்படி புதிதாக கணக்கை தொடங்குவது என்று தொகுப்பில் பார்ப்போம்.
செல்வமகள் காப்பீடு திட்டம்:
இந்திய அரசாங்கம் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் இந்திய அஞ்சல் துறையின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டம் மட்டும் தான் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த திட்டத்தில் கொட்டி கிடைக்கும் நன்மைகள் மற்றும் சிறப்பான சலுகைகள் தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்று அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!
இந்திய பிரதமர் மோடி இந்த சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போதைய காலாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை அரசால் அங்கீகரிக்க பட்ட வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் கணக்குகளை தொடங்கி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் உடைய பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்கு மேல் இருக்க கூடாது. அதாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இது மட்டுமில்லாமல், ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாதம் ரூபாய் 2500 சேமித்து வந்தால் இந்த திட்டத்தின் இறுதி காலத்தில் ரூபாய் 12,00,000 வரை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் சேருவதற்கு தேவையான சான்றிதழ்கள், இந்த திட்டத்தில் சேர உள்ள குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அடுத்து, அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்றுக்கான பான், வாக்காளர் அட்டை, ஆதார் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, குறைந்தபட்சம் ரூ. 250 அல்லது நீங்கள் விரும்பும் தொகைக்கு காசோலை அல்லது வரைவோலை ஆகியவற்றை கொண்டு இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக தபால் அலுவலகம் இல்லையென்றால் இந்த திட்டம் வழங்கப்படும் வங்கிகளுக்கு சென்று இந்த திட்டத்தின் கணக்கைத் துவங்கலாம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1 என்ற படிவத்தை நிரப்ப வேண்டும். மேல் கூறிய அனைத்து விவரங்களையும் சரி பார்த்த பின், வங்கி அல்லது தபால் நிலையம் தங்களின் இந்த திட்டத்திற்கான கணக்கை ஆக்ட்டிவ் செய்து அதன் பாஸ்புக் கொடுக்கப்படும். இவ்வாறு இந்த திட்டத்தின் கணக்கை ஆரம்பித்து கொள்ளலாம் என்று இந்திய அஞ்சல் துறை தெரிவித்து உள்ளது. மேலும் இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸில் மட்டுமில்லாமல் அங்கீகரிக்க பட்ட ஒரு சில வங்கிகளில் செயல்பட்டு வருகிறது.