இன்று (ஏப்ரல் 24) முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
இன்று (ஏப்ரல் 24) முதல் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று (ஏப்ரல் 24) முதல் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று (ஏப்ரல் 24) முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கேரள மாநிலத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் தமிழகம், கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 28,447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோவில் கட்டண சலுகை ரத்து – ஏப்ரல் 25 முதல் அமல்!!

இதன் காரணமாக அங்கு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கேரளாவில் இன்று (ஏப்ரல் 24) முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முறையான காரணங்கள் இல்லாமல் மக்கள் யாரும் வெளியே வர கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!