தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருவதால் சனிக்கிழமை விடுமுறை விடும்படி அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இதன் பின்பு கொரோனா தொற்று தமிழகத்தில் ஓரளவுக்கு குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பொதுத்தேர்விற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
விவசாயிகளுக்கு மாதந்தோறும் 900 ரூபாய் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
பொதுத் தேர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்து பள்ளி ஆரம்பமான நாளில் இருந்தே அனைத்து சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், சனிக்கிழமை விடுமுறை விடும்படி அரசுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.