தனது கணவரை பிரிந்த “சரவணன் மீனாட்சி” சீரியல் நடிகை ரட்சிதா – வைரலாகும் தகவல்!
விஜய் டிவி “சரவணன் மீனாட்சி” சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரட்சிதா, அவர் தன்னுடன் நடித்த தினேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இருவருக்கும் விவாகரத்து ஆக இருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை ரட்சிதா மகாலக்ஷ்மி:
தமிழ் சினிமாவை விட சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உண்டு. நல்ல குடும்ப கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் பல குடும்ப ரசிகர்களும், இளசுகள் கூட சீரியல் பார்க்கின்றனர். அந்த வகையில் 2013ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியலில் அறிமுகமானவர் ரட்சிதா. அவரை மீனாட்சி என சொன்னால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும் அந்த அளவிற்கு அவரின் அந்த கதாபாத்திரம் பிரபலமானது.
பாரதியுடன் சண்டையிடும் ஹேமா – வைரலாகும் ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
இந்நிலையில் ரட்சிதா தற்போது விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில் அவர் விஜய் டிவியில் “பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் – ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!
தற்போது அவர்களது திருமண வாழ்க்கை குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மை இல்லை எனவும் அது வெறும் வாந்தி தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி குறித்து இன்னும் அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.