அரசு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம் – டெல்லி அரசின் சூப்பரான அறிவிப்பு!
தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியும் மற்றும் செயற்படுத்தியும் வருகிறது. அந்த வகையில், தற்போது டெல்லியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சானிட்டரி நாப்கின்
நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, இலவச சீருடை, புத்தகம், மிதிவண்டி மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவையான ஒன்றாக உள்ள சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் – அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்!
Follow our Instagram for more Latest Updates
அதாவது பிரதான் மந்திரி பாரதிய ஜனுஷாதி பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் கிராமப்புறத்தில் இருக்கும் மாணவிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். மேலும் இது தொடர்பான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவிதா சாரதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரைவிலான மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு பள்ளிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் பெறப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 200 மாணவிகளுக்கு ஆண்டுக்கு 72000 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.