‘தவறு இருந்தால் மன்னியுங்கள்’ – தி பேமிலி மேன் வெப்சீரிஸ் நடிகை சமந்தா பேட்டி!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்த தி பேமிலி மேன் வெப்சீரிஸில் எனது கதாபாத்திரத்தில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை பேட்டி:
நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வந்த தி பேமிலி மேன் என்ற வெப்சீரிஸ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது கொரோனா பரவலால் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களையும், பாராட்டையும் பெற்றது. இந்த தொடரில் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் திரித்து சொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
WhatsApp Desktop புதிய அம்சம் அறிமுகம் – முழு விவரம் இதோ!
ராஜ் மற்றும் டீகே இயக்கி இருந்த இந்த தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, உதயபானு மகேஸ்வரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த தொடர் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், வெளியாகிய பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதே உண்மை. ஆனால், இதன் மீதான எதிர்ப்பு என்பது தற்போதும் உள்ளது. இந்த படம் குறித்து சமந்தா பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், ராஜி என்ற கேரக்டரில் ஈழத்தமிழ் பெண்ணாக நடித்துள்ள நான் அந்த கதாபாத்திரம் குறித்து பல்வேறு விமர்சங்களை சந்தித்து வந்தேன். இந்த படம் வெளியாகிய பின் பலரும் இந்த பாத்திரத்தை விரும்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால், ஒரு சிலர் இன்னும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால்” யார் மனதையாவது நான் காயப்படுத்தியிருந்தால் நான் உளமார மன்னிப்பு கோருகிறேன்” என்று பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்த தொடருக்காக சிறந்த வெபிஸீரீஸ் நடிகை என்ற விருதை மெல்போர்ன் திரைப்பட திருவிழாவில் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.