நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு வெளியே வந்த சமந்தா – வைரல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமா நடிகையான சமந்தா, தனது கணவருடன் விவாகரத்து பெற்ற பின் முதன் முதலாக வெளியே வந்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா:
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன் பின் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது தெலுங்கில் சகுந்தலம், தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
கடந்த சில வாரங்களுக்கு முன் தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதற்கான சரியான காரணங்கள் தெரியாத நிலையில் தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்து பதிவிடுவார். ஆனால் தற்போது விவாகரத்து காரணமாக அவர் வெளியே எங்கேயும் போகாமல் இருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் விவாகரத்திற்கு பின் முதன்முதலாக அவர் வெளியே வந்துள்ளார். அவர் வளர்க்கும் செல்லப் பிராணி இரண்டு நாய்களுக்கும் உடல்நிலை சரியில்லை எனவே அவர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.