நயன் மற்றும் விக்கி பற்றி புகழ்ந்து தள்ளிய சமந்தா – ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ருசிகரம்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க நடிகை விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை பற்றிய சமந்தாவின் கருத்து வெளியாகியுள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல்:
விக்னேஷ் சிவன் அறிமுக இயக்குனராக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து எடுத்த நானும் ரௌடி தான் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் ஆகியது. இந்த படத்தின் மூலமாக தான் விஜய் சேதுபதிக்கு மாஸ் ஹீரோ அடையாளம் கிடைத்தது. நயன்தாரா காதம்பரி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். இந்த படத்தின் மூலமாக தான் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இதுவே இந்த படத்தின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் பிறகு, விக்னேஷ் இயக்கத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படம் பெரிய வெற்றி நிலையை அடையவில்லை.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாசமலராக கவனம் ஈர்க்கும் விஜே விஷால் & நேஹா – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில், தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் மற்றும் உச்ச நடிகைகள் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். அதுபோல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்துள்ளார். இதை, ஹீரோவாக நடிகை விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகம். படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், நடிகை சமந்தா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தது பற்றி பேசும் போது, இந்த படத்தில் நடித்தது என்னால் மறக்க முடியாது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்கள். கதையில் எனது வேடம் நயன்தாராவிற்கு நிகரானது என்று கூறியிருந்தார்கள். அதேபோல், தான் படமாக்கப்பட்டுள்ளது. அனைத்து காட்சிகளிலும் நயன்தாராவுடன் சேர்ந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளதாகவும், நயன்தாரா தனது வேடத்திற்கு டப்பிங் கொடுப்பது போலவும், விக்னேஷ் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.