‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாசமலராக கவனம் ஈர்க்கும் விஜே விஷால் & நேஹா – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சமீப காலமாக கவனம் ஈர்த்து வரும் பாசமலர் ஜோடிகளான அண்ணன் விஜே விஷால் மற்றும் தங்கை நேஹாவின் கியூட்டான ரீல்ஸ் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் அவர்களது ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
ரீல்ஸ் வீடியோ
பொதுவாக சினிமா திரைப்படங்கள், சீரியல்கள் என அனைத்திலும் சில குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களை ஒன்றாக சேர்த்து பார்க்கும் போது இவர்கள் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக, கணவன் மனைவியாக, அம்மா அப்பாவாக, அம்மா மகனாக, அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என எல்லாரும் நினைப்பது உண்டு. இதில் ஸ்வாரசியம் என்னவென்றால் திரைப்படங்கள் அல்லது சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் ரீல் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விடுகிறார்கள்.
Vijay TV Bigg Boss 5: சிபி, அபிஷேக் இடையே முற்றிய மோதல் – ஷாக்கான போட்டியாளர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
மற்றவர்கள் தங்களுக்கு இடையே நல்ல நட்புறவை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அம்மா மகனை போல, அண்ணன் தங்கை உறவும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு வருகிறது. இந்த தொடர் அம்மா பாக்கியா மற்றும் மகன் எழிலுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும், இதில் அண்ணன் எழில் மற்றும் தங்கை இனியா காட்சிகளும் சமீப காலமாக ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த சீரியலில் இவ்விருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தாலும், திரைக்கு பின்னால் நடிகை நேஹா மற்றும் விஜே விஷால் இருவரும் சொந்த அண்ணன், தங்கை போல தான் பழகி வருகின்றனர். இது குறித்து இவர்கள் இருவரும் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக நேஹாவை அண்ணன் விஷால் லட்டு என செல்லமாக அழைக்க சீரியலிலும் அதே வார்த்தையை பயன்படுத்தியதாக நடிகர் விஷால் பல நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு மீண்டும் வந்த ரோஷினி? வெண்பா பரீனா கொடுத்த விளக்கம்!
இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், இன்ஸ்டா ரீல்ஸ் செய்து அவற்றை இருவரும் வலைதளங்களில் பதிவிட இந்த அண்ணன், தங்கை ஜோடிக்கு எக்கச்சக்க வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இவர்கள் இருவரும் ‘பாசமலர்’ திரைப்படத்தில் வருவதை போல எப்போதும் பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.