IPL 2021 – CSK அணியுடன் இணைந்த கடைக்குட்டி சிங்கம் சாம் கரன்! ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான சாம் கரன் ஐக்கிய அரபு எமீரகத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL போட்டிகள்
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு வந்த இந்த ஆண்டுக்கான IPL லீக் போட்டிகள் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக இடை நிறுத்தப்பட்டது. இதையடுத்து IPL போட்டிகளின் மீதமுள்ள ஆட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI), வரும் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமீரகத்தில் (UAE) வைத்து போட்டிகளை துவங்க இருக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் விளையாட்டு வீரர்களின் குழு ஒவ்வொன்றாக UAE க்கு வருகை தந்து வருகிறது.
‘முடிந்தது சகாப்தம்’ – கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!
அந்த வகையில் கடந்த வாரங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி உள்ளிட்ட சில வீரர்கள் அரபு எமீரகத்துக்கு சென்றுள்ளனர். மேலும் CSK அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா, புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோரும் கடந்த 11 ஆம் தேதியன்று தங்களது அணியில் இணைந்துள்ளனர். அதே போல இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்துள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்களும் 2 தினங்களாக UAE க்கு வந்துகொண்டுள்ளனர்.
இப்போது IPL போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து வீரர்களும் 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை முடித்தவுடன் போட்டிகளில் களம் காண உள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாம் கரன் இன்று (செப்டம்பர் 15) ஐக்கிய அரபு எமீரகம் வந்தடைந்துள்ளார். இந்த தகவலை சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மீண்டும் தடை விதிப்பு – முதல்வர் அறிவிப்பு!
தற்போது CSK அணியுடன் இணைவதற்கு முன்னாக சாம் கரன் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை அணி மும்பை அணியுடன் மோதும் முதலாம் நாள் ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே CSK அணியின் முன்னணி வீரர் பாப் டு பிளெஸ்ஸி காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என்ற நிலையில் சாம் கரன் அணியுடன் இணையாதது CSK அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.