தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மீண்டும் தடை விதிப்பு – முதல்வர் அறிவிப்பு!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. எனவே தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு வெடிக்க தடை:
தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. அன்று மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகள் இல்லாத தீபாவளி திருநாளை நினைத்து பார்ப்பது சற்று கடினமான ஒன்று. இருப்பினும் காற்று மாசுபடுவதை குறைக்க பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தினால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பண்டிகைகள் கோவில் திருவிழாக்கள் முதலியவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் – நீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது காற்று மாசுபடுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் மீண்டும் காற்று மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே டெல்லியில் தீபாவளி அன்று பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து – ICAI அறிவிப்பு!
இது குறித்து முதல்வர் கூறியதாவது, டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக கடந்தாண்டை போலவே தீபாவளிக்கு பட்டாசு சேமிக்கவும், விற்கவும், வெடிக்கவும் இந்தாண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்போது தான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும். கடந்தாண்டு பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டதால் பலர் நஷ்டமடைந்தனர். அதனால் இந்த ஆண்டு யாரும் பட்டாசுகளை சேமித்து வைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன் என கூறியுள்ளார். டெல்லியில் தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.