தமிழகத்தில் 1.2 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

0
தமிழகத்தில் 1.2 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் 1.2 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் 1.2 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

ஊதிய உயர்வு

கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த ஜூலையில் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். தமிழகத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை – அரசின் சூப்பரான அறிவிப்பு!

இது ஆறு மாத காலத்திற்கு பிறகு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருவதால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேச்சுவார்த்தையை மேலும் இழுக்காமல் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் இதில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 25 சதவீதம் வழங்குவது, டிரைவர், கண்டக்டருக்கு அரசு ஊழியர் சம்பளம் நிர்ணயம் செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், பென்சன்தாரர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு முன்வந்து உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் வருகிற செப்டம்பர் 1ம் தேதி அன்று மீண்டும் ஒரு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!