தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் – அரசாணை வெளியீடு!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தமிழக அரசிற்கு தற்போது கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசிற்கு அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நிவாரண தொகையாக பிடித்துக் கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பேரழிவினை ஏற்படுத்தி வருவதன் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் தற்போது தமிழக அரசிற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற நிதியினை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இதன் அடிப்படையில் பல தரப்பு மக்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து திமுக எல்.எல்.ஏ.,க்கள் மற்றும் எப்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை சில தினங்களுக்கு முன்பு கொரோனா நிவாரணத்திற்காக வழங்கினர். தற்போது இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்.
ஆதார் அட்டை மறுபதிவு சேவை நிறுத்தம் – UIDAI அறிவிப்பு!!
தற்போது அதற்கான அரசனையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு உதவி மற்றும் மானியங்களை பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், தொகுப்பூதியம் பெரும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை பிடித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்ததன் எதிரொலியாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.