கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ஊதியம் – நகராட்சி அரசு அறிவிப்பு!
இமாச்சல பிரதேசத்தில் உஜ்ஜைன் நகராட்சியில் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என உஜ்ஜைன் நகராட்சி ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
உஜ்ஜைன் நகராட்சி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசு மக்களை காக்க கொரோனா தடுப்பூசிகளை முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு செலுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே தீர்வாக உள்ளது. 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மாநிலங்கள் தோறும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் தொற்று பரவல் குறையும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – அலிபிரி நடைபாதை மூடல்!!
பலர் சில தவறான கருத்துக்களால் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுக்கின்றனர். அரசு நோய் பரவல் குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசி குறித்த நன்மைகளையும் மக்களுக்கு விளக்கி வருகின்றது. ஆனாலும் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர். தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. அதிகாரிகள் சிலர் நூதன முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதே போல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகராட்சி தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
உஜ்ஜைன் நகராட்சியில் 30 சதவீத ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வராததால் அந்நகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஊதியம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. நகராட்சி ஊழியர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் எனவே அவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் ஆகும். அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வைக்கவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தடுப்பூசியை செலுத்திக் கொள்வது கட்டாயமல்ல என்ற விதிமுறைக்கு எதிராக இந்த உஜ்ஜைன் நகராட்சியின் அறிவிப்பு அமைந்துள்ளது.