திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – அலிபிரி நடைபாதை மூடல்!!
திருப்பதி கோவிலின் அலிபிரி நடைபாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் இன்று (ஜூன் 1) முதல் அடுத்த 2 மாதங்களுக்கு அந்த பாதை மூடப்பட்டிருக்கும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைபாதை மூடல்:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக திருப்பதி உள்ளிட்ட பல மதவழிபாட்டு தலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் இலவச வருகைக்கு தடை விதிக்கப்பட்டு, கட்டணம் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலின் அலிபிரி நடைபாதை 2 மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!!
அதாவது அலிபிரி நடைபாதையில் மேற்கூரை அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், ஏராளமான இடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த பாதைகளை சீரமைக்கும் பணிகளை ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் பாதை சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த சீரமைப்பு பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் என்பதால், அதுவரை அலிபிரி நடைபாதை மூடப்பட்டிருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பாதைகளை பயன்படுத்தாமல், மாறாக ஸ்ரீவாரிமெட்டு மார்க்கம் வழியாக திருமலைக்கு செல்லும்படிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏன்டா பாவிகளே. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு 3 செகண்ட் கூட கொடுக்காம கையை பிடித்து இழுத்து தல்லுநீங்களே ஞாபகமில்ல. இப்போ கொரோனா வந்து உங்க யாரையும் உள்ள விடாம பண்ணிட்டார் பாத்தீங்களா. பாவத்துக்கு பரிகாரம் கிடையாடுடா பாவிகளே.