மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.8,000 வரை சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்றை மோடி அரசு அறிவித்து உள்ளது. பாதுகாப்புத் துறையில் சிவில் ஊழியர்களுக்கு, பதவிக்கு ஏற்ப ரிஸ்க் அலவன்ஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அலவன்ஸ் தொகை மாதந்தோறும் சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். இந்த அறிவிப்பு காரணமாக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜாக்பாட் அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த நிலையில் அரசு சார்பில் ஒரு தகவல் அறிவிக்கப்பட்டது, 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலை தெரிவித்திருந்தது. மேலும் 5 மாநில தேர்தல் முடிவு அண்மையில் வெளியானது, இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசு பெரிய தொகையை வழங்கியுள்ளது. பாதுகாப்புத் துறையில் உள்ள பல வகை சிவில் ஊழியர்களுக்கும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக சில கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
இதன் அடிப்படையில் பாதுகாப்புத் துறையின் சிவில் ஊழியர்களின் ரிஸ்க் அலவன்ஸை (Risk Allowance) அதிகரிக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு காரணமாக ஊழியர்களின் சம்பளம், 8000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள இந்த கொடுப்பனவு, மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டவை ஆகும். இந்த கொடுப்பனவு அதிகரிப்பு, அரசின் ஒப்புதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டவை ஆகும். இந்த சிறப்பு கொடுப்பனவை ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால், ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 1000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் வரை அதிகரிக்கும். இந்த ரிஸ்க் அலவன்ஸ் தொகை பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.1000 முதல் 8000 ரூபாய் வரை சம்பள உயர்வு!
இந்த பிரிவில் வரும் ஊழியர்களின் கொடுப்பனவு கீழ், முறைப்படுத்தப்படாத பணியாளர்களுக்கு மாதம் ரூ 90 அபாய கொடுப்பனவு, சில வகை பணியாளர்களுக்கு மாதம் ரூ.135, சில குறிப்பிட்ட வகை பணியாளர்களுக்கு மாதம் ரூ.180, கெஜட்டட் அல்லாத அதிகாரிகளுக்கு மாதம் ரூ.408, கெசட்டட் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.675 கொடுப்பனவு கொடுக்கப்படும். இதைத்தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 16ம் தேதி அகவிலைப்படி உத்தரவு குறித்த அறிக்கையை அரசு வெளியிட்டால், அரசு ஊழியர்களுக்கு மத்திய வழங்கும் ஹோலிப் பண்டிகை பரிசாக இருக்கும் என ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.