அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு – புத்தாண்டில் ஹாப்பி நியூஸ்!
அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சம்பள உயர்வு கிடைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 50% நிறுவனங்கள் 2022ம் ஆண்டு முதல் ஊதியத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கை விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். தற்போது அரசின் போதிய முயற்சியாலும், தடுப்பூசிகள் பயன்பட்டாலும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. ஆனாலும் மக்கள் மீண்டும் வேலைகளுக்கு செல்வது என்பது சவாலாக இருந்து வருகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
இந்நிலையில் அமெரிக்க ஊழியர்களின் சம்பளம் 3.9% உயரப்போவதாக The Conference Board ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற 50% நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்த விரும்புவதாக கூறுகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு 3.9% சம்பள உயர்வு கிடைக்கும். அதிலும் ஆய்வில் பங்கேற்ற 46 சதவீத நிறுவனங்கள் புதிய ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று, முதல்வர் நாளை ஆலோசனை!
செப்டம்பர் மாதத்தில் மட்டும் வேலையை மாற்றிய ஊழியர்களுக்கு 6.6% சம்பள உயர்வு கிடைத்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. அடுத்ததாக அக்டோபர் மாதத்தில் 1.1 கோடி வேலைவாய்ப்புகள் இருந்துள்ளன. இதில் 65 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேசமயம் 42 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேறிய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பள உயர்வு குறித்த தகவலையடுத்து அமெரிக்க ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.