தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று, முதல்வர் நாளை ஆலோசனை!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று, முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று, முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று, முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதியுடன் இறுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

முதல்வர் ஆலோசனை:

தமிழகத்தில் தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் முதல் அலை, இரண்டாம் அலை என்று மாறி மாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது. தீவிர ஊரடங்கின் விளைவினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. மேலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் மக்கள் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாரத்தில் இரண்டு நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவல் நாட்டில் மஹாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பர் 15ம் தேதியுடன் தமிழகத்தில் இறுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது. இதனால், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியிருடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.

CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவத்தேர்வு குறித்த விபரங்கள்!

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவது குறித்தும், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஓமைக்ரான் பரவலை தமிழகத்தில் தடுப்பதற்கான வழிமுறைகளை குறித்தும், தடுப்பூசி இயக்கத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர கட்டுப்பாடுகள் மற்றும், பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை கூர்ந்து கண்காணிக்கவும் தமிழகத்தில் முன்னதாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!