TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(TNPSC) நடத்தப்படும் குரூப் 4 தேர்வு பாடத்திட்டங்கள், தேர்வு மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
குரூப் 4:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தந்த துறைகளுக்கு ஏற்ப குருப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளை லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு எழுதுபவர்களின் கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வில் அடங்கும்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று, முதல்வர் நாளை ஆலோசனை!
இந்த குரூப் 4 தேர்வு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வரும் நிலையில் TNPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 5,225 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது.
TNPSC Coaching Center Join Now
இந்த தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வில் விருப்ப மொழிப்பாடம் பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இதில் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மேலும் மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களை கொண்டு கணக்கிடப்படும்.