அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் – மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

0
அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் - மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் - மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் – மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

நாடு முழுவதும் இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைகளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசு அதிரடி:

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சிறந்த முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி அதனை கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கியது. மத்திய அரசை தொடர்ந்து சில மாநில அரசுகளும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊதிய உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்? சென்னை மாநகராட்சி ஆலோசனை!

இந்நிலையில் அடுத்தடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அரசு என்ன சலுகை வழங்க உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவா மாநில அரசு தங்களது ஊழியர்களுக்கு பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் பிரமோத் சவாந்த் அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அமைச்சர் விளக்கம்!

பொதுவாக பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்குவது வழக்கம். அதன்படி கோவா மாநில அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு வரும் டிசம்பர் 22ம் தேதிக்குள் சம்பளம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய அறிவிப்பு அம்மாநில அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!