அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் & ஓய்வூதியம் – ஆளுநர் அனுமதி!!

0
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் & ஓய்வூதியம் - ஆளுநர் அனுமதி!!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் & ஓய்வூதியம் - ஆளுநர் அனுமதி!!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் & ஓய்வூதியம் – ஆளுநர் அனுமதி!!

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஆளுநர் தமிழிசை அவர்கள் அனுமதி அளித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த 14 மாதங்களாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஏதும் வழங்கப்படவில்லை. இதற்காக கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி முதல்வர் சட்டப்பேரவை கூட்டத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!! 

ஆசிரியர்களுக்கான ஊதியம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை தாமதமின்றி மாதம் தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சார்பாக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆளுநரின் அனுமதி:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் தலைமை செயலாளர் மற்றும் ஆலோசகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 14 மாதங்களாக வழங்கப்படாத அவர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண குழுவின் வரைவு அறிக்கையும் ஆளுநர் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!