SAIL நிறுவனத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய ஸ்டீல் ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Medical Officer, etc பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Sr. Consultant, Consultant, Medical Officer, Manager, Dy. Manager, Assistant Manager, Operator cum Technician (Trainee), Attendant cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver(Trainee) பணிக்கென மொத்தம் 259 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, BE/B.Tech, M.Sc.,MBBS, PG Degree/DNB /DM என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 44 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.12,900/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- E1 or above பணிக்கு ரூ. 700/- (General/OBC/EWS), ரூ.200/- (SC/ST/PWD/ESM/Departmental candidates), S3 பணிக்கு ரூ.500/-(General/OBC/EWS) ரூ.150/- (SC/ST/PWD/ESM/Departmental candidates) மற்றும் S1 பணிக்கு ரூ.300/- (General/OBC/EWS) ரூ.100/- (SC/ST/PWD/ESM/Departmental candidates) விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Test/எழுத்து தேர்வு/ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.12.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.