ஆகஸ்ட் 15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பு பூஜைகளுக்காக நடை திறக்கப்படவுள்ளது. இதற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை நடைதிறப்பு:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள் முன்னிலையில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா சற்று குறைந்து வந்ததால் சபரிமலை கோயில் நடை கருக்கிடக மாத பூஜைக்காக திறக்கப்பட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாள் ஒன்றுக்கு 5,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
Microsoft நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் வேலைகள் – விவரங்களுடன் ஆய்வு தகவல்!
அதனை தொடர்ந்து தற்போது ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிற 15 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து 16ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெறும். இதில் முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வேகமெடுக்கும் காரணத்தால் முன்னெச்சரிக்கை பணியாக பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம். முன்பதிவு செய்திருந்தாலும் சான்றிதழ்கள் இல்லை எனில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.