தமிழகத்தில் ஆகஸ்ட் 13 முதல், செப்டம்பர் 21ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆனது ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும். மேலும் பட்ஜெட் குறித்த விவாதம் 3 நாட்கள் தொடரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்:
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக அணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களின் அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இதனை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 14ம் தேதி முதல் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் நிதி அமைச்சர் தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு!
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆக குறைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடி தர வேண்டியுள்ளது என்றும் முன்னாள் ஆட்சி அமைத்த அதிமுக அரசின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக இதுபோன்ற சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது போன்ற சூழலிலும் தி.மு.க அரசு தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் ஆனது ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும். மேலும் பட்ஜெட் குறித்த விவாதம் 3 நாட்கள் தொடரும் என்றும், அதன் பின் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.