ரஷ்யாவின் 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் – இன்று இந்தியா வருகை!
ரஷ்யாவின் 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை 3.40 மணியளவில் ஐதராபாத் வந்தது. மேலும் ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்துக்கு இந்த தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி:
கொரோனா நோய் தொற்றிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை விரட்டும் கருவியாக உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
காலை 7 மணி முதல் இரவு 7 வரை கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
இதை தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி அனுமதி பெற்ற இந்த தடுப்பூசி இன்று அதிகாலை 3.40 மணியளவில் ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 30 லட்சம் மருந்துகள் வந்தடைந்துள்ளது. -20 டிகிரி செல்சியஸில் இது பாதுகாக்கப்பட வேண்டும். அதன்படி பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தடுப்பூசி அப்பல்லோ மருத்துவமனையில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதன் விலை, ஒரு டோஸ் ரூ.1195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் செலுத்தப்படும் டோஸ் விலை ரூ.995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்புட்னிக் வி மூலமாக கொரோனாவுக்கு தீர்வு காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யவிருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.