காலை 7 மணி முதல் இரவு 7 வரை கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அம்மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது நாடு முழுவதும் குறைந்து வருகிறது. அதாவது சில வாரங்களுக்கு முன்னாக 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது ஒன்றரை லட்சமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில், சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு PF அதிகரிப்பு – 7வது சம்பள கமிஷன்!!
தளர்வுகளில் முதல் பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள 64 பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக லக்கிம்பூர், காசிப்பூர் மற்றும் ஜான்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதாவது உத்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 600 க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இது தவிர மாநிலம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி ஊரடங்கு உத்தரவானது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும். தவிர இரவு நேர ஊரடங்கு உத்தரவு முன்பு போலவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திங்கள் முதல் வெள்ளி ஆகிய 5 நாட்களிலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து சந்தைகளும், கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பயிற்சி நிறுவனங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பார்கள் ஆகியவை அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். உணவகங்கள் வீட்டு விநியோகத்திற்காக மட்டுமே செயல்படலாம். தவிர சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது அறிவிக்கப்பட்டு, அவை மே 31 வரை நீட்டிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Use full message