அக்.9ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறுவதால் வாக்கெடுப்பு நடைபெறும் பகுதிகளுக்கு பொதுவிடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொது விடுமுறை விடப்பட்டுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பொது விடுமுறை:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் பொது விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.168 உயர்வு – மாலை நிலவரம்!
எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெண்ணந்தூர் ஒன்றியம் முழுவதும், எருமப்பட்டி ஒன்றியத்தில் (வாழவந்தி, செவ்வந்தி பட்டி மற்றும் வடவத்தூர் ஊராட்சிகள்), கோணங்கிப்பட்டி கிராம ஊராட்சி மற்றும் பவித்திரம் கிராம ஊராட்சிகள், கபிலர்மலை ஒன்றியம், கொப்பனம்பாளையம் ஊராட்சி, பரமத்தி வட்டாரம் கூடச்சேரி ஊராட்சி பகுதிகள்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங்மெஷின், கிரைண்டர் பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கொல்லிமலை ஒன்றியம் தின்னனூர் நாடு ஊராட்சி, மோகனூர் வட்டாரம் என்.புதுப்பட்டி ஊராட்சி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டி , திம்மநாயக்கன்பட்டி, பெரப்பன்சோலை மங்களபுரம் ஊராட்சிகள், புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சி புதூா், எஸ். உடுப்பம், திருமலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.