சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.168 உயர்வு – மாலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி அதிரடியாக விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிரடி விலை உயர்வு:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று பாதிப்படைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தினர் முதல் நல்ல வசதி படைத்தவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான முதலீடாக தங்கம் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் மக்கள் அதிகம் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். அதுவும், இந்த மாதத்தில் அடுத்தது பண்டிகை நாட்கள் வர உள்ளது. இதனால் அனைவரின் கவனமும் தங்கத்தின் மீது தான் திரும்பும்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங்மெஷின், கிரைண்டர் பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை ரூ. 192 அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை நேர வர்த்தக சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ.35,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமிற்கு ரூ.21 அதிகரித்து ரூ. 4,411 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆதார் கார்டினை மொபைல் நம்பர் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
மேலும், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.4,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை மீதான இந்த அதிரடி விலை உயர்வினால் நகை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.