தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங்மெஷின், கிரைண்டர் பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கரூர் மாவட்டத்தில் வரும் 10 ம் தேதி நடைபெற்றவிருக்கும் 5 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மிஷின் மற்றும் குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பரிசு பொருட்கள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் முதல் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பரவலும் குறைந்து வருகிறது. இதனால் அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுகிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஆதார் கார்டினை மொபைல் நம்பர் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி பற்றி பரவிய தவறான தகவலால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயங்கினர். அரசு தடுப்பூசி செலுத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் போதிய விழிப்புணர்வுகளை வழங்கியது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்களை அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பரிசு பொருட்களை அறிவித்துள்ளார்.
TN TRB 2,207 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – வயது வரம்பு நீக்கம்? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
முகாமில் தடுப்பூசி செலுத்துக்கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசாக தங்க காசு, வெள்ளி நாணயம், குத்து விளக்கு உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.