சீனா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு RT-PCR சோதனை நெகட்டிவ் சான்று கட்டாயம் – இந்திய அரசு உத்தரவு!
கொரோனா தொற்று அலை மீண்டும் உலகத்தை பீதியடைய செய்துள்ள நிலையில், குறிப்பிட்ட 6 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு RT-PCR சோதனையை கட்டாயமாக்கி இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சோதனை:
இந்தியாவில் தற்போது நிலவரப்படி கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோவிட் தொற்று மேலும், பரவாமல் தடுப்பது தான் முக்கிய இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
PF கணக்குத்தாரார்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் இருப்புத்தொகையை அறியலாம்.. வழிமுறைகள் இதோ!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
சீனாவில் மட்டும் தான் புதிய வகை கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் பதிவாகி வந்தது. அங்கிருந்து தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் புதிய வகை வைரஸ் பரவி விட்டது. இந்த புதிய வகை வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுகள் மிகவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளில் இருந்தும், அந்த நாடுகளின் வழியாகவும் வரும் பயணிகளுக்கு COVID-19 RT-PCR சோதனையின் நெகட்டிவ் ரிசல்ட் கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, விமானங்களில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன், கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.