தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி விடுவிப்பு – வருவாய் பற்றாக்குறை நிதி!
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 5வது தவணை மூலம் ரூ.183.67 கோடி என மொத்தமாக ரூ.918.33 கோடி கிடைத்துள்ளது.
நிதி விடுவிப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான வருவாய் பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு நிதி துறைகள் வழங்கிய நிலையில், வருவாயை காட்டிலும் செலவினம் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதி வழங்க நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் 2021-22ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 5வது தவணை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மிஸ்டு கால் கொடுத்தால் புதிய LPG இணைப்பு – இந்தியன் ஆயில் அறிமுகம்!
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 5வது தவணை மூலம் ரூ.183.67 கோடி என மொத்தமாக ரூ.918.33 கோடி கிடைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகம், ஆந்திரா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகம், கேரளம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்ரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 17 மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு – ரூ.918.33 கோடி
- ஆந்திரா – ரூ.7190.42 கோடி
- அசாம் – ரூ.2656.67 கோடி
- ஹரியானா – ரூ. 55.00 கோடி
- ஹிமாச்சல் பிரதேசம் – ரூ. 4270.42 கோடி
- கர்நாடகா – ரூ.679.58 கோடி
- கேரளா – ரூ.8287.92 கோடி
- மணிப்பூர் – ரூ.1051.67 கோடி
- மேகாலயா – ரூ.532.92 கோடி
- மிசோரம் – ரூ.745.83 கோடி
- நாகாலந்து – ரூ.1898.75 கோடி
- பஞ்சாப் – ரூ.4200.42 கோடி
- ராஜஸ்தான் – ரூ.4115.83 கோடி
- சிக்கிம் – ரூ.282.50 கோடி
- திரிபுரா ரூ.1894.17 கோடி
- உத்தரகாண்ட் ரூ.3238 கோடி
- மேற்கு வங்கம் ரூ.7336.25