தெலுங்கானா மாநில அரசு ரூபாய் 500 மானிய சிலிண்டர் திட்டத்தை பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தியுள்ள நிலையில் இதற்கான மானிய தொகையை அரசு வரவு வைத்துள்ளதை சோதிக்கும் வழிமுறைகள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம்:
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்துள்ள சட்டமன்ற தேர்தலில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அமைந்துள்ளது. புதிதாக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு அளித்த வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்த அரசு தொடங்கியது. அதன்படி தகுதி உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் மகாலெட்சுமி திட்டத்தின் கீழ் ரூபாய் 500 விலையில் கேஸ் சிலிண்டர் திட்டம் தொடர்பாக விவரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அரசு தரப்பில் இருந்து 18.86 லட்சம் பேர் மானிய சிலிண்டர் திட்டத்தை பயன்படுத்தி தொடங்கியுள்ளதாகவும், ரூபாய் 59.97 கோடி வரை மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள மானிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை www.mylpg.in என்ற இணையதளத்தில் சென்று சோதித்து அறிந்து கொள்ள முடியும்.