உங்களிடம் ரூ.500 நோட்டு உள்ளதா? – ஷாக் தகவல்! இத படிங்க முதல்ல!
இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் அதிகரித்து வரும் கள்ள நோட்டு புழக்கம் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
கள்ள நோட்டு புழக்கம்:
2023 செப்டம்பர் மாத இறுதியுடன் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதன் காரணமாக மூன்று மாதங்களாக 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் தான் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட தாள்களாக உள்ளது. இதன் காரணமாக அதிக அளவில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 20223 ஆம் ஆண்டு நிலவரப்படி 91,110 ரூபாய் 500 போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா பரவல்? பாதிப்பு எண்ணிக்கை 430 ஆக உயர்வு! விரைவில் ஊரடங்கு?
இதற்கு முந்தைய ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகம். இதேபோல் 100, 50, 20 , 10 ஆகிய நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 ரூபாய்நோட்டுகளின் பங்கு 37.9% ஆகவும், 10 ரூபாய் நோட்டுகளின் பங்குகள் 19.2% ஆகவும் இருந்துள்ளது. 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கியானது இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. மேலும் பொதுமக்களும் கள்ள நோட்டுகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.