தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகை? அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2023ம் ஆண்டு என்ன பரிசுத்தொகுப்பை அரசு வழங்க போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது ரூ.3000 ரொக்க பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி வருகிறது. இதுவரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ரொக்க பணம் ஏதும் வழங்காமல் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை மட்டும் வழங்கியது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் வரும் 2023ம் ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது அரசு 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பண பரிசும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு தொடக்கம் – 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?
Exams Daily Mobile App Download
இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ரூ. 3000 ரொக்க பணத்தை அரசு வழங்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.