மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.2500 பென்ஷன் – யார் யாருக்கு கிடைக்கும்? முழு விபரம் இதோ!

0
மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.2500 பென்ஷன் - யார் யாருக்கு கிடைக்கும் முழு விபரம் இதோ!
மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.2500 பென்ஷன் - யார் யாருக்கு கிடைக்கும் முழு விபரம் இதோ!
மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.2500 பென்ஷன் – யார் யாருக்கு கிடைக்கும்? முழு விபரம் இதோ!

இந்தியாவில் ஓய்வு காலத்தில் மூத்த குடிமக்கள் பென்சன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதையடுத்து ஹரியானா மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படும் நோயாளிகளுக்கென்று பென்சன் திட்டம் ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பற்றி முழுமையான விபரங்களை பார்ப்போம்.

பென்சன் திட்டம்

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணி ஓய்வு நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய தொகை மூத்த குடிமக்களுக்கு நிதி நெருக்கடி காலத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசும் மூத்த குடிமக்களுக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு வகையான பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைவதால் மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை அத்துடன் மாதந்தோறும் அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இதனை தொடர்ந்து ஏராளமான பென்சன் திட்டங்கள் அமலில் உள்ள சூழலில் ஹரியானா மாநில அரசு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று ஒரு பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை “அடல் கேன்சர் பென்சன் திட்டம்”, என்ற பெயரில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். இத்திட்டமானது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாதம் 2500 ரூபாய் வரை பயனாளிகளுக்கு பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தலசீமியா மற்றும் ஹீமோபிலியா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2500 பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கீழ் இலவசமாக சிகிச்சை பெறலாம். அத்துடன் இதில் நோயாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை ஏற்படும் செலவுகளை அரசு ஏற்று கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!